அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தென்காசியாரின் குற்றச்சாட்டு - அவருக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம்


ஆரம்ப காலம் முதலாகவே உண்மையின் எதிரிகள், பொய்யின் நண்பர்கள், இறைவன் புறமிருந்து தோன்றும் எல்லா இறைதூதர்களுக்கும், மார்க்க சீர்திருத்தவாதிகளான முஜத்திதுமார்களுக்கும் எதிராகப் பொய், வஞ்சகம், முதலியவைகளின் அடிப்படையில் அவர்களை எதிர்த்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக மக்களிடையே தப்பெண்ணங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் அவர்களை ஒப்புக்கொள்வதிலிருந்தும் தடை செய்து கொண்டிருந்தார்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. பார்க்க (திருக்குர்ஆன் 4:61, 7:46) 

எல்லா இறைத்தூதர்களுக்கும் எதிராக ஒரேவிதமான ஆட்சேபனைகள் கூறப்பட்டு வந்துள்ளன என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. 


குர்ஆனில் கைவைத்து தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்திய கீழ்தரமான ஆலிம்களின் செயல்


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்காக குர்ஆன் மென்பொருளில் இல்லாத எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்று எதிரிகள் இப்போது புது பொய்யை பாமர மக்கள் முன் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் சூரா ஆலு இம்ரான் வசனம் 7 இல் "பில் ஹக், பில் ஹக், பில் ஹக்" என்று இல்லாத ஒரு சொல்லை இந்த காதியானிகள் சேர்த்துள்ளார்கள் என்பதே! இது பொய்யை மூலதனமாகக் கொண்டு பிழைப்பை நடத்தும் ஆலிம்களின் செயலாகும். உண்மை எது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்:


சுலைமான் நபியைப் பற்றிய தவறான கருத்து.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 338 இல் அவரை ஒரு சடலமாக போட்டோம். பின்னர் அவர் திருந்தினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இவ்வசனத்திற்கு (38:34) பெரும்பாலான மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழிபெயர்த்துள்ளனர் ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம். சடலத்தைப் போட்டோம் என்று தங்கள் மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வசனத்தில் ஸுலைமானை ஒரு சடலாகப் போட்டோம் என்று கூறப்படுகிறது. இது, நோயுற்று பலவீனப்பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும். 


கற்பனைக் கதைகளின் மணிமகுடம் - P.J க்கு மறுப்பு


"இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்" என்ற தலைப்பில் ஒரு நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. "போலிகளை இனம் காண இந்த நூல் உதவும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது" என அதனுடைய ஆசிரியர் தனது அறிமுகத்தில் எழுதியுள்ளார்.

இன்றைய மார்க்க உலகில் பரவியுள்ள மூட நம்பிக்கைகளுக்கும், கற்பனைக் கதைகளுக்கும் மணிமகுடமாகத் திகழ்வது ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் பூத உடலோடு உயிர் வாழ்கிறார் என்பதாகும் என்ற பேருண்மையையும் அந்த நூல் தெளிவுபடுத்திக்காட்டுகிறது. இது போன்றதொரு கட்டுரை 1989 மே மாத நஜாத் இதழில் பக்கம் 50 முதல் 53 வரை இதே நடையில் இதில்

சுலைமான் நபியின் மீது கட்டுக்கதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 327 இல் ஜின்களுக்கு மறைவானவை தெரியாது என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸை கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். (குர்ஆன் 34:14) 

ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார் ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார். பிறகு கைத்தடியை கரையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகுதான் ஸுலைமான் நபி ஏற்கனவே

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ

பாதிரிகளுக்கு துணை போகும் ஆலிம்கள்


அஹ்மதிய்யா இயக்கத்தை அதன் நூறாண்டு கால வரலாற்றில் எதிர்த்திட்ட அமைப்புகள் ஏராளம். ஆனால் அவற்றில் எதுவுமே நிலைத்ததில்லை. இப்போது சென்னையில், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் முளைத்துள்ளது. ஒரு ‘இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை’. 

இவர்கள் பாதுகாப்பது இறுதி நபித்துவத்தை அன்று அவதூறுகளையும், ஆகாசப் புளுகளையுமே! இவர்களால் வினியோகிக்கப்பட்ட ‘காதியானிகளைப் பற்றி சிந்திக்க சீரிய வழி’ என்ற வெளியீடு அபத்தங்களின் மொத்த தொகுப்பு!


ஈசா நபி (அலை) அவர்களின் மரணமும் 'நஜாத்' ஏட்டின் மூடநம்பிக்கையும் - 2


திருக்குர் ஆனின் பல்வேறு சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் வசனங்கள் ஒன்றை ஒன்று தெளிவுபடுத்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான். விவாதத்துக்குரிய திருமறை வசனமான "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய போது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முபாஹலா தோல்வி அடைந்ததா? – நஜாத் ஆசிரியருக்கு பதில்.


நஜாத் ஆசிரியரின் கேள்வி:

எந்த முகத்தோடு இந்தக் காதியானி மிர்ஸா தாஹிர் முபாஹலாவுக்கு அழைக்கிறாரோ நாம் அறியோம். ஒருவேளை அவரது பாட்டனார் மிர்ஸா குலாம் 15-4-1907 இல் மௌலவி சனாவுல்லாஹ் அமிர்தஸரி அவர்களுடன் முபாஹலா செய்து அந்த பிராத்தனையின் விளைவாக காலராவினால் 26-5-1908 மரணமடைந்ததை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும். 

நம் பதில்:


ஈசா (அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்-1


தமிழக முஸ்லிம்களிடையே சிலர், தம்மை தௌஹீது வாதிகள் என்றும், திருக்குர்ஆன், ஹதீஸ் இவற்றின் அடிப்படையில் மட்டுமே மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களென்றும் பறை சாற்றி சிறிது மதிப்பு பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் தாமும் அதே குழப்பக்கார குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அது மட்டுமன்று, இவர்களை, ஏனைய ஆலிம்சாக்களிலிருந்து மாறுபட்டவர்களாக, மார்க்க மேதைகளாக கருதிவந்த மார்க்கப்பற்றுள்ள இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இவர்கள் தமது பத்தாம் பசலித்தனத்தைக் காட்டியுள்ளனர்.


இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது 

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில்

இமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி


ஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) 

குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, 

அவன் (அல்லாஹ்) மறைவானவற்றை அறிந்தவனாவான். அவன் மறைவானவற்றை, தனது தூதர்களில் தான் விரும்புகிறவர்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. (72:27,28 )

மேற்கண்ட வசனத்திலிருந்து, இறைதூதாரர்களுக்கு இறைவனுடன்

இயேசு வந்துவிட்டார்


அசன் அபூபக்கர்

இதோ வருகிறார் இயேசு என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான்

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு.


இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள். 

வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35) நியாயப்படுத்துவதற்காக, வருகின்ற ஈஸா

ஆதம் நபி முதல் மனிதர் இல்லை.!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 46 இல் கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

கலீஃபா எனும் அரபி சொல் ஒருவர் இறந்த பின் அல்லது அவர் செயலற்றுப் போனபின் அவரது இடத்தைப் பெறுபவர் என்ற பொருளில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்கு சான்று உண்டு. (நூற்கள் முஸ்லிம் 1525 அஹ்மத் 25417) 


ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தி நபி வருவார்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 187 இல் இறுதி நபித்துவம் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி இறுதித் தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும் தூதரும் வரவே முடியாது என்பதற்கு இவ்வசனங்கள். (4:79,170, 7:158, 9:33, 10:57,108, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) சான்றுகளாக உள்ளன. 

மனித குலத்திற்கே உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 4:79, 4:170, 6:19, 7:158, 14:52, 33:40) என்பதும் அவர்களுக்குப் பின் நபியோ தூதரோ வரமாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. 


ஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். 

நம் விளக்கம்: 

பி.ஜே யின் திருமறையின் தோற்றுவாய் எனும் நூலிலும் அந்த அற்புதங்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். 


இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது


அபூ அப்தில்லாஹ்வின் அபத்தமான கூற்று.

அபூ அப்தில்லாஹ் தன்நூல் பக்கம் 36, 37-இல் திருக்குர்ஆன் 39:42 வசனத்தில் விளக்கியதற்கொப்ப, ஒருவரின் உயிரை 100 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 2:259 வசனத்திலும் அதே போல் சிலருடைய உயிர்களை சுமார் 300 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 18:25 வசனத்திலும் தெளிவுபடுத்தப் படுகின்றன. இதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களின் சில ஆயிரங்களோ பல ஆயிரங்களோ ஆண்டுகள் இறைவன் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவிப்பது பற்றி ஈமான் கொண்டவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழாது என்று எழுதியுள்ளார். 


இரு வேறு ஈஸா நபிமார்கள்


பக்கம் 53 இல் அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்: 

ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும், கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது. இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா (அலை) இருந்தார்கள். 

நம் பதில்: 

ஈஸா நபி (அலை) முதலில் வந்த போது செய்த அற்புதங்களை அபூஅப்தில்லாஹ் கூறியுள்ளார். ஈஸாநபியின் இரண்டாவது வருகையின் போது அவர் சிலுவையை முறிப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா வரியை நீக்குவார்; செல்வங்களை வாரி வாரி வழங்குவார்; நீதியை நிலைநாட்டுவார் தீர்ப்பு வழங்குவார்; தஜ்ஜாலைக் கொல்வார் என்று நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.