அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக தோட்டமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை – வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கையினை குறித்து சிராஜ் அப்துல்லாஹ்வின் அறியாமை


இக்காலத்தில் எல்லா இஸ்லாமிய பிரிவுகளும் பிற இஸ்லாமிய பிரிவுகளை குறைக் கூறிக் கொண்டு அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள், எனவே நாங்களே சரியான பிரிவு என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை போல் சுயமாக ஒரு பிரிவை ஏற்ப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் இக்கால மக்களை சரி செய்வதற்காக தன் புறமிருந்து ஒருவரை அனுப்பியுள்ளான். அவர் அல்லாஹ் மற்றும் ரசூலால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியும் மஸீஹும் ஆவார். அவரை பின்பற்றுவதன் மூலமே குழப்பங்களுக்கு தெளிவும் வழிகேட்டிலிருந்து நேர் வழியும் கிடைக்கும்.எனவே இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தே இக்காலத்தில் உண்மையானதாகும்.கடந்த காலத்தில் மக்கள் வழி தவறிய போது அல்லாஹ்

மிஹ்ராஜ் பயணம் ஆத்மீக காட்சியே – அந் நஜாத்திற்கு பதில்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 47, 48, இல் இவ்வாறு எழுதியுள்ளார். 

காதியானிகள், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்துள்ளதை மறுத்து வருவதை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்களின் (மிஹ்ராஜ்) விண்வெளிப் பயணத்தையும், ஆதம் (அலை) அவர்கள் சுவர்கத்திலிருந்து பூமிக்கு பூத உடலுடன் இறங்கியதையும் மறுத்து வருகிறார்கள். இதற்க்குக் காரணம் இந்த இரண்டு நிகழ்சிகளையும் உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டி வரும் என்ற தப்பான எண்ணமேயாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்கு சென்றது கனவில் கனவில் இடம் பெற்ற நிகழ்ச்சியே என்று அவர்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் குர்ஆனில் இஸ்ரா என்ற

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2


அடுத்து ஈஸா நபி (அலை) 2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும், கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.

அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என 5:76 இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.

அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா?


அந்நஜாத் அக்டோபர் 2010 இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி, 'அவர்கள் செல்வது நேர்வழி அல்ல; கோணல் வழிகளில் ஒன்றே என்பது குரான், ஹதீஸை எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகின்றவர்கள் அறிய முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதற்க்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்று, மார்க்கம் முழுமையடைந்துவிட்டது; அதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை. (5:3) அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப் படுத்தப் பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) ஆகியையாகும்.

எல்லா நபிமார்களை விட எல்லா வகையிலும் சிறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே!


அபூ அப்தில்லாஹ் பக்கம் 28 இல், தூதர்களில் சிலரை சிலரைவிட மேன்மையாக்கி இருக்கிறோம்... என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்ற எல்லா நபிமார்களையும் விட எல்லா விசயங்களிலும் உயத்த்தி இருப்பதாகச் சொல்லவில்லை என்று எழுதி, ஈஸா (அலை) தகப்பனின்றி பிறந்தது, வானிற்கு உயர்த்தப்பட்டது போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளாரா? என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. 

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

நம் பதில்:

ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.

46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை

ஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 278 இல் தாயாருக்கு நன்மை செய்யும் காலமெல்லாம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களுக்கு எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன. எனவே 29:32 வசனத்தின் பொருள் என்னவென்று பார்ப்போம் என்று எழுதியுள்ளார்.

பிறருடைய மொழிபெயர்ப்பு:

ஈஸா கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

வழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறிய அவலம்.


இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று

அபூ அப்தில்லாஹ்வின் அறிவீனம்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 37 இல் “ஒரு மனிதனின் உயிர் உறக்கத்தின் நிலையில் கைப்பற்றபட்டாலும் அவனை சுற்றி நடைபெருபவைகளை அவன் அறியமாட்டான். இந்நிலையில் அவன் அவைகளின் நிமித்தம் குற்றம் சாட்டப்படவும் மாட்டான். இந்த அடிப்படையிலேயே ஈஸா (அலை) அவர்கள் 5:117 வசனத்தில் என்னைக் கைப்பற்றிய பின், உலகில் இல்லாத காலத்தில் அவர்கள் செய்தவைகளை நான் அறியேன், நீயே நன்கறிந்தவனாக இருக்கிறாய் என்று கூறுகிறார்கள். எனவே 5:117 வசனத்தை ஆதாரமாக காட்டி ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று காதியானிகள் கூறுவது அறிவீனமாகும்” என்று எழுதியுள்ளார். 

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது 

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது

நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை.


நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என்றப் பெருமையைப் பெற்றுத்தந்த அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் ஒப்பற்ற தொண்டர் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் வாழ்க்கையின் சில குறிப்புகளை இங்கு காண்போம். 

பிறப்பு: 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பாகிஸ்தானில் சாஹிவால் (Sahiwal) என்னும் இடத்திலுள்ள சன்டோக்டாஸ் (Santokdas) என்னும் ஊரில் சௌதிரி முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கும் ஹாஜிரா பேகம் அவர்களுக்கும் 1926 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள், 29ம்

இஸ்லாமிய குற்றயியல் சட்டம் (மௌலவி முஹம்மது உமர் H.A)


இவ்வுலக வாழ்வில் மனிதன் இரண்டு விதமான தீமைகளிலும், பாவச் செயல்களிலும் ஈடுபடுகின்றான். ஒன்று ஆன்மீகரீதியான பாவச் செயல்கள். வெளிப்படையான விதத்தில் நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனை கிடைக்கிறது. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்யப்படும் பாவங்களுக்கும், ஷரியத்தின் கட்டளைகளுக்கு எதிராக செய்யப்படும் தீமைகளுக்கும் இறைவனே தண்டனை கொடுக்கிறான். 

இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா அரசாங்கங்களிலும், அவற்றின் சட்டங்களிலும் பல்வேறு குற்றங்களுக்கேற்ற விதத்தில் தண்டனை முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொதுவான நன்மைகளையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுமே இந்தத் தண்டனைகள்

கரைபடியாத மறைநூல் – திருக்குர்ஆன்


“இன்னா நஹ்னு நஸ்ஸல்னாத் திக்ர வ இன்னா லஹு ல ஹாபிலூன்.” 

நிச்சயமாக நாமே இந்த திக்ரை (திருக்குர்ஆனை) இறக்கினோம். மேலும் நாமே இதன் பாதுகாவலனாக இருப்போம்” (திருக்குர்ஆன் 15:10) 

திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட மறைநூல் மட்டுமன்று அவனால் எல்லாக் காலத்திலும் பாதுகாக்கப்படுகின்ற அற்புத நூலும் கூட என இத் திருவசனம் அறிவுறுத்துகின்றது. 

வேத நூற்களாகட்டும, வேதாகமமாகட்டும் அவற்றில் இறை வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறலாமேயொழிய அவை முழுக்க முழுக்க

அஹ்மதிய்யா ஜமாத்தும், கவிஞர் இக்பாலும்


தமிழ் நாடு வக்பு வாரியத்தின் மாத ஏடான ‘இஸ்மியில்’ மௌலான என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத் பற்றிய தமது கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார், 

“மகாகவி இக்பால், காதியானிகளை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மாற்றிவிடவேண்டுமென வெகுகாலத்திற்கு முன்பே கூறினார். அவருடைய கூற்று அப்பொழுது முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது”

அஹ்மதிய்யா ஜமாத்தை எதிர்ப்பவர்கள், ‘அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறுவதற்கு, கவிஞர் இக்பாலின் வாலைப்பிடித்துக் கொண்டு, அந்த ஒரு சான்றே போதுமானது எனப் பேசுவது வழக்கம். ஆனால், அல்லாமா இக்பால், பாக்கிஸ்தானில் உள்ள ஸியால் கோட்டில் படித்துக்

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும்

மூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும்.


உபகாமம் 34:6 இல் “ இந்நாள் வரைக்கும் அவன் பிரேதக்குழியை அறியான்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மோசேயின் வாழ்க்கை முடிவு, இயேசுவின் வாழ்க்கை முடிவைப்போல் கட்டுக்கதைகள் நிறைந்தது. 

“மோசே மக்களை விட்டுப் பிரிந்து சென்ற பின்னர் நீபோ மலையுச்சியில் எலிசேரையும் யோசுவாவையும் சந்திப்பதற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மேகம் அவர் மீது வந்து நின்றது. அவர் மறைந்துவிட்டார்.” உண்மை இவ்வாறிருக்கையில் அவரது அதி உன்னத நற்குணங்கள் காரணமாக அவர் ஒரு இறைவனாக மாறிவிட்டார் என்று மக்கள் சொல்லலாம் என்ற பயத்தினால் தாம் மரணித்துவிட்டதாக வேதாகமத்தில் அவர் எழுதி வைத்துச் சென்றார். (Ant. iv..8 and 48) 

திருக்குரானும் இயேசுவும்


'இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருக்கிறது' என கிருஸ்தவ போதகர்கள், முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து வரும் இந்நாட்களில், இயேசுவை பற்றியும் இக்கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி அது எந்த வகையில் பைபிளுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கிட விரும்புகிறோம். 

"எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" (1 தெசலோனி 5:21) என்ற பைபிளின் போதனைக்கிசைய இக்கருத்துக்களை கிருஸ்தவ நண்பர்கள் நடு நிலை நின்று ஆராய்ந்து உண்மையெனக் கண்டவற்றை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம். 

இறுதி வெற்றி இறைத்தூதர்களுக்கே


ஓர் இறைத்தூதருக்கு எதிராக அவரின் எதிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் வசை மொழிகள், சத்தியத்திற்கு எதிராக எழுதப்படும் எழுத்துக்கள் ஆகியன இறை கோபத்திற்கு ஆளானவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை அவர்கள் தங்களின் கரங்களாலே தேடிக் கொள்கின்றனர். பிறரை வசைமொழிவதும், இட்டுக்கட்டிப் பேசுவதும் இறைசாபத்திற்கு உரியனவையே . தங்களுடைய திட்டங்களாலும் அடிப்படையில்லாத ஆதாரமற்ற பொய்க்கூற்றுகளாலும் இறைவனின் என்னத்தை முறியடிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உலகை ஏமாற்றி, வானத்திலிருந்து தீர்ப்பளிக்கப்பட்ட இறைவனுடைய பணிகளை நிறுத்தி விடலாம் என கருதுகின்றார்களா? சத்தியத்திற்கு எதிராக இவர்களது திட்டங்களில் இதற்க்கு முன் எப்போதாவது வெற்றி இவர்களுக்கு கிடைத்திருக்குமானால், இப்போதும் இவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

இறைவனே எங்களுடைய திட்டங்களின் நடுத்தூணாக இருக்கின்றான். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.


உண்மையிலேயே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் அந்த இறைவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்குகின்றபோது அவன் உங்களுக்காக விழித்திருப்பான். நீங்கள் உங்களுடைய எதிரிகளைப் பற்றி கவனமற்றிருக்கும்போது உங்களுடைய இறைவன் அவர்களைக் கண்காணித்து அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பான். உங்களுடைய இறைவன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் அதனை உணர்ந்திருந்தால் உலகிற்காக கவலைப்படக்கூடிய ஒருநாள் கூட உங்களுக்கு இராது. தன்னிடத்திலே ஒரு பெரும் பொக்கிஷத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் அவனிடமிருந்து ஒரு காசு காணாமற் போனால் அதற்காக அழுது புலம்புவானா? அதற்காக தன்னை

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! - ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்


இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. 

இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி பெற்றிருக்கமாட்டேன். என் போன்ற ஓர் ஏழை மனிதனின் மூலமாக, அவனுடைய மார்க்கத்தின் கண்ணியம் வெளிப்பட வேண்டுமென

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா?


(இலண்டனில் நடைபெற்ற மஜ்லிசே – இர்ஷாத் என்னும் கேள்வி பதில் கூட்டத்தில் ஹஸ்ரத் கலீபதுல் மஸீஹ் மாற்றுமதத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அந்த கேள்வி பதிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.) 

கேள்வி: ஹஸ்ரத் மிர்ஸா குலாம்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா? 

இல்லை ஒரு போதும் இல்லை. ஜிஹாதின் பெயரால் போர் மூட்டுவதைத்தான் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். ஜிஹாதும். போரும் இரண்டு தனித்தனி விஷயங்களாகும். ஜிஹாதிலும் சில சந்தர்ப்பங்களின் போர் இடம் பெறுகின்றது. ஆனால் ஒவ்வொரு ஜிஹாதும் ஒரு போரல்ல.