அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆலிம்களைக் கவர்ந்த காதியானி (அபூதாரிக்)


மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி அவர்கள் உலகப் புகழ்பெற்ற இந்திய அறிஞர். இவர் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அந்நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் இவரை ஒரு பேரறிஞராக ஏற்று கௌரவித்துள்ளன. இவர் டில்லியிலுள்ள ஜாமியா மில்லியா நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றி இவருடைய மாணவர் மௌலான முஹம்மது ஸர்வார் என்பவர் உருது மொழியில் இஹ்பாதாத்தோ மல்பூஸாத் ஹஸ்ரத் மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் காணப்படும் குறிப்பு